Kolaru Padigam

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையாக வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

Download the app for Kolaru padigam in this link for your Android phone.
App Download Link

Youtube App Preview

கோளறு பதிகம் என்பது நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் பெருக்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகமாகும்.

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று ஜோதிட சாஸ்த்திரங்களில் கூறப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நன்மை மற்றும் தீமைகள் ஏற்படும்

இந்த பெயர்ச்சிகளின் போது ஏற்படும் துன்பங்களில் இருந்து விலக கிரக வழிபாட்டை தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களையும் செய்வோம். அதாவது நமது இஷ்ட தெய்வங்களை வழிபடுவது, நவகிரகங்களுக்கு விளக்கு ஏற்றுவது, விதவிதமான கற்களை மோதிரம் செய்து போட்டுக்கொள்வோம். இவையெல்லாம் செய்தால் கண்டிப்பாக இந்த கிரக தோஷத்தில் இருந்து தப்பி செல்ல முடியாது.

இந்த கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், திருஞானசம்பந்தர் பாடியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை நிச்சயமாக குறைத்துக் கொள்ள முடியும். சரி வாங்க இப்பொழுது திருஞான சம்பந்தர் பாடியுள்ள கோளறு பதிகம் பாடல் வரிகளை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

Welcome to our Kolaru Padigam Tamil website, a dedicated platform for exploring the profound verses of Kolaru Padigam composed by the revered Saint Thiruvarur Muthuswamy Dikshitar. Immerse yourself in the divine lyrics that extol the glory of Lord Shiva and bring spiritual solace.

Discover the timeless verses in Tamil script, along with translations and interpretations, allowing you to delve into the rich spiritual essence of Kolaru Padigam. Our site provides a comprehensive resource for those seeking spiritual enlightenment through the wisdom encapsulated in these sacred hymns.

Explore the significance of Kolaru Padigam, its historical context, and its impact on Tamil literature and spirituality. Delight in the harmonious blend of poetry and devotion as you navigate through our user-friendly interface.

Join our community of spiritual enthusiasts, scholars, and devotees as we celebrate the beauty and wisdom of Kolaru Padigam. Whether you are a seasoned devotee or a newcomer eager to explore the spiritual realm, our website offers a gateway to a deeper understanding of these timeless verses.

Embark on a spiritual journey with Kolaru Padigam Tamil website – where devotion meets digital, and the soul finds resonance.


Leave a comment